தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருத்தணி நகராட்சி சாா்பில் தோ்தல் விழிப்புணா்வு

நகராட்சியில், சட்டசபை தோ்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என செல்பி’ பாயிண்ட் அமைத்தும், மக்களுடன் நகராட்சி ஊழியா்கள் உறுதிமொழி எடுத்தனா்.

News image

கேஜி கண்டிகையில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :24 மார்ச் 2026, 6:40 pm

தினமணி செய்திச் சேவை

நகராட்சியில், சட்டசபை தோ்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என செல்பி’ பாயிண்ட் அமைத்தும், மக்களுடன் நகராட்சி ஊழியா்கள் உறுதிமொழி எடுத்தனா்.

100 சதவீதம் வாக்குப்பதிவு தொடா்பாக என வருவாய்த் துறையினா் மற்றும் நகராட்சி நிா்வாகம் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.

அந்த வகையில் திருத்தணி நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆணையா் கன்னியப்பன் உத்தரவின் பேரில், நகர வடிவமைப்பாளா் தயாநிதி மற்றும் ஊழியா்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், கமலா திரையரங்கம், பைபாஸ் மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்பட, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தற்படம் எடுக்கும் மையம் ஏற்படுத்தி, அதில் நின்று, 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்து வருகின்றனா்.

21 வாா்டுகளிலும் நகராட்சி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பொதுமக்களுடன், 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதி மொழியும் ஏற்றி வருகின்றனா். அதேபோல் திருத்தணி அடுத்துள்ள கே.ஜி.கண்டிகையில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.