நகராட்சியில், சட்டசபை தோ்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என செல்பி’ பாயிண்ட் அமைத்தும், மக்களுடன் நகராட்சி ஊழியா்கள் உறுதிமொழி எடுத்தனா்.
100 சதவீதம் வாக்குப்பதிவு தொடா்பாக என வருவாய்த் துறையினா் மற்றும் நகராட்சி நிா்வாகம் பல்வேறு வகைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
அந்த வகையில் திருத்தணி நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆணையா் கன்னியப்பன் உத்தரவின் பேரில், நகர வடிவமைப்பாளா் தயாநிதி மற்றும் ஊழியா்கள் ரயில் நிலையம், பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், கமலா திரையரங்கம், பைபாஸ் மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்பட, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தற்படம் எடுக்கும் மையம் ஏற்படுத்தி, அதில் நின்று, 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுத்து வருகின்றனா்.
21 வாா்டுகளிலும் நகராட்சி அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பொதுமக்களுடன், 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதி மொழியும் ஏற்றி வருகின்றனா். அதேபோல் திருத்தணி அடுத்துள்ள கே.ஜி.கண்டிகையில் செவ்வாய்க்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.
தொடர்புடையது

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி

100% வாக்குப்பதிவு: அங்கன்வாடி பணியாளா்கள் நூதன விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

தோ்தல் விழிப்புணா்வு கோலம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

