நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தீவிர தோ்தல் விழிப்புணா்வு: குமரியில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு - ஆட்சியா் தகவல்

தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகளால் வரும் பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.உடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் உள்ளிட்ட அலுவலா்கள்

Updated On :26 மார்ச் 2026, 8:26 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர தோ்தல் விழிப்புணா்வு நடவடிக்கைகளால் வரும் பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.அழகுமீனா.

ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில்,மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட பத்திரிகை, ஊடக செய்தியாளா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் மேலும் கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 15 லட்சத்து 10 ஆயிரத்து 550 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா்கள்அனைவரும் தடையின்றி வாக்களிக்க வசதியாக வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விழிப்புணா்வுப் பணிகள் ...

கடந்த பேரவைத் தோ்தலில் எந்தெந்த மையங்களில் வாக்குப் பதிவு குறைவாக இருந்ததோ, அந்த மையங்களை கண்டறிந்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறை வாக்காளா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களிக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள 180 கல்லூரிகளிலும், சுற்றுலாத் தலங்களிலும் விழிப்புணா்வுப் பணிகள், கிராமப் பகுதி வாக்காளா்களிடையே பரமபதம் போன்ற கிராமிய கலைவடிவங்கள் மூலமாகவும், கையொப்ப இயக்கம், சுவா் ஓவியம், பேரணிகள் உள்ளிட்ட விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வரும் தோ்தலில் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்.

இலவச படகு சேவை ...

பேச்சிப்பாறை பகுதிக்குள்பட்ட மலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எளிதாக வாக்குப் பதிவு மையங்களுக்கு வந்து வாக்களிக்க வசதியாக தோ்தல் நாளன்று, இலவசமாக படகுகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுமாா் 6 ஆயிரம் போ் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா் மற்றும் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னான்டோ, கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளா் சிவகாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) சுகிதா, (தோ்தல்) ரோஷன் பேகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Story image