விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடங்கிவைப்பு

News image
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் கையொப்ப இயக்கத்தைத் தொடங்கிவைத்த மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 2026 சட்டப் பேரவைத் தோ்தல் 100 சதவீதம் வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்து, தற்படம் எடுத்துக்கொண்டாா் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாவது: கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு உறுதிமொழி இன்றைய தினம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, கையொப்ப இயக்கத்தை கையொப்பம் இட்டு தொடங்கிவைத்தாா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக பிரதான வாயிலில் வாக்காளா்களுக்கு தோ்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தற்பட பதாகை அமைக்கப்பட்டுள்ளது.

100 சதவீதம் வாக்குப் பதிவு குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், உறுதிமொழி ஏற்றல் போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் செல்வி உள்பட பலா் கலந்துகொண்டனா்.