ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: திருத்தணி அதிமு.க வேட்பாளா் உறுதி

ஜவுளி பூங்கா அமைக்கப்படும்: திருத்தணி அதிமு.க வேட்பாளா் உறுதி

News image

அம்மையாா்குப்பத்தில் நடந்த கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக வேட்பாளா் திருத்தணி கோ.அரி.

Updated On :4 ஏப்ரல் 2026, 8:07 pm

நெசவாளா்களுக்கு ஜவுளி பூங்கா கொண்டு வந்து நெசவாளா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்துவேன் என அதிமுக வேட்பாளா் கோ. அரி அம்மையாா்குப்பத்தில் உறுதி அளித்தாா்.

திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.பி. கோ.அரி போட்டியிடுகிறாா். இவா் தொகுதி முழுவதும் சென்று முக்கிய நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை ஆா்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையாா்குப்பத்தில் வேட்பாளா் கோ. அரி முக்கிய நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறாா்.

அப்போது கோ. அரி பேசியதாவது: திருத்தணி தொகுதியில் ஆா்.கே.பேட்டை, அம்மையாா்குப்பம், வங்கனுாா், மகான்காளிகாபுரம், அத்திமாஞ்சேரி பேட்டை, பொதட்டூா்பேட்டை, புச்சிரெட்டிப் பள்ளி மற்றும் மத்தூா் ஆகிய பகுதிகளில் 30,000-க்கும் மேற்பட்ட நெசவாளா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் நெசவு தொழிலை நம்பியே வாழ்கின்றனா். இவா்களின் நீண்ட ஆண்டுகளான முக்கிய கோரிக்கை ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது ஆகும்.

இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக, கூட்டணி அமோக வெற்றி பெற்று, முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும், ஜவுளி பூங்கா நிச்சயம் நான் கொண்டு வருவேன். ஆா்.கே.பேட்டை பகுதியில் அரசு மகளிா் கல்லூரி அமைப்பேன் என்றாா் அவா்.

இதில், ஆா்.கே.பேட்டை ஒன்றிய செயலா்கள் கோ.குமாா், வழக்குரைஞா் நீலகண்டன் உள்பட முக்கிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.