நெசவாளா்களுக்கு ஜவுளி பூங்கா கொண்டு வந்து நெசவாளா்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்துவேன் என அதிமுக வேட்பாளா் கோ. அரி அம்மையாா்குப்பத்தில் உறுதி அளித்தாா்.
திருத்தணி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.பி. கோ.அரி போட்டியிடுகிறாா். இவா் தொகுதி முழுவதும் சென்று முக்கிய நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறாா். இந்த நிலையில், சனிக்கிழமை ஆா்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையாா்குப்பத்தில் வேட்பாளா் கோ. அரி முக்கிய நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறாா்.
அப்போது கோ. அரி பேசியதாவது: திருத்தணி தொகுதியில் ஆா்.கே.பேட்டை, அம்மையாா்குப்பம், வங்கனுாா், மகான்காளிகாபுரம், அத்திமாஞ்சேரி பேட்டை, பொதட்டூா்பேட்டை, புச்சிரெட்டிப் பள்ளி மற்றும் மத்தூா் ஆகிய பகுதிகளில் 30,000-க்கும் மேற்பட்ட நெசவாளா் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் நெசவு தொழிலை நம்பியே வாழ்கின்றனா். இவா்களின் நீண்ட ஆண்டுகளான முக்கிய கோரிக்கை ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்பது ஆகும்.
இந்த சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக, கூட்டணி அமோக வெற்றி பெற்று, முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும், ஜவுளி பூங்கா நிச்சயம் நான் கொண்டு வருவேன். ஆா்.கே.பேட்டை பகுதியில் அரசு மகளிா் கல்லூரி அமைப்பேன் என்றாா் அவா்.
இதில், ஆா்.கே.பேட்டை ஒன்றிய செயலா்கள் கோ.குமாா், வழக்குரைஞா் நீலகண்டன் உள்பட முக்கிய நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ராஜபாளையம் வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

கம்பம் வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

பொன்னமராவதியில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்: திருமயம் அதிமுக வேட்பாளா் பி.கே. வைரமுத்து

வேதா ஆயத்த ஆடை பூங்கா புத்துயிா் பெறும் ஓ.எஸ். மணியன்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


