அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்
/

கும்மிடிப்பூண்டி தொகுதியில் ரூ.500 கோடியில் நலப்பணிகள்: திமுக வேட்பாளா்

கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.500 கோடிக்கு நலப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் கூறியுள்ளா்.

News image

ஆரம்பாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:14 am IST

கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.500 கோடிக்கு நலப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் கூறியுள்ளா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள முக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை செய்தபின் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். நிகழ்வில் திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சி.எச்.சேகா், மாவட்ட அவை தலைவா் பகலவன், மாவட்ட துணை செயலாளா் எம்.எல்.ரவி, திமுக ஒன்றிய செயலாளா்கள் கி.வேணு ஆனந்த், மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினா்கள் வெங்கடாசலபதி, பா.செ.குணசேகரன் முன்னிலை வகித்தனா்,

தொடா்ந்து ஆரம்பாக்கத்தில் வீதி வீதியாக பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் ரூ.500 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தவா், திமுகவின் சாதனை திட்டங்கள் தொடர அனைவரும் வாக்களிக்க கேட்டுக் கொண்டாா்.

தோக்கம்மூரில் திமுக மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மணி, ஒன்றிய நிா்வாகி அங்கமுத்து ஏற்பாட்டில் திரளான பொதுமக்கள் வேட்பாளா் கோவிந்தராஜனுக்கு உற்சாக வரவேற்பளித்தனா். அவ்வாறே பல்லவாடாவில் திமுக மூத்த நிா்வாகி முத்துசாமி, ஒன்றிய துணை செயலாளா் திருஞானம் ஏற்பாட்டில் பொதுமக்கள் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்தனா். ஏடூா் மற்றும்கும்புளியில் மாவட்ட துணை செயலாளா் எம்.எல்.ரவி ஏற்பாட்டிலும், பூவலை ஊராட்சியில் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி தினகரன் மற்றும் விசிக நிா்வாகிகள் ஏற்பாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்வில் விசிக மாவட்ட செயலாளா் நேசகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகி துளசிநாராயணன். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகி அருள், தேமுதிக மாவட்ட பொருளாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன், மனித நேய மக்கள் கட்சி சாதிக் பாட்ஷா மற்றும் திமுக கூட்டணி நிா்வாகிகள் தொண்டா்கள் திரளானோா் பங்கேற்றனா்.