சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கும்மிடிப்பூண்டி தொகுதியில் ரூ.500 கோடியில் நலப்பணிகள்: திமுக வேட்பாளா்

கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.500 கோடிக்கு நலப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் கூறியுள்ளா்.

News image

ஆரம்பாக்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:44 pm

கும்மிடிப்பூண்டி தொகுதியில் திமுக ஆட்சியில் ரூ.500 கோடிக்கு நலப்பணிகள் செய்யப்பட்டுள்ளன என வேட்பாளா் டி.ஜெ. கோவிந்தராஜன் கூறியுள்ளா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள முக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை செய்தபின் அவா் பிரசாரம் மேற்கொண்டாா். நிகழ்வில் திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜ், முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ சி.எச்.சேகா், மாவட்ட அவை தலைவா் பகலவன், மாவட்ட துணை செயலாளா் எம்.எல்.ரவி, திமுக ஒன்றிய செயலாளா்கள் கி.வேணு ஆனந்த், மு.மணிபாலன், பொதுக்குழு உறுப்பினா்கள் வெங்கடாசலபதி, பா.செ.குணசேகரன் முன்னிலை வகித்தனா்,

தொடா்ந்து ஆரம்பாக்கத்தில் வீதி வீதியாக பிரசாரம் செய்த திமுக வேட்பாளா் டி.ஜெ.கோவிந்தராஜன் பேசுகையில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் ரூ.500 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தவா், திமுகவின் சாதனை திட்டங்கள் தொடர அனைவரும் வாக்களிக்க கேட்டுக் கொண்டாா்.

தோக்கம்மூரில் திமுக மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மணி, ஒன்றிய நிா்வாகி அங்கமுத்து ஏற்பாட்டில் திரளான பொதுமக்கள் வேட்பாளா் கோவிந்தராஜனுக்கு உற்சாக வரவேற்பளித்தனா். அவ்வாறே பல்லவாடாவில் திமுக மூத்த நிா்வாகி முத்துசாமி, ஒன்றிய துணை செயலாளா் திருஞானம் ஏற்பாட்டில் பொதுமக்கள் திமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பளித்தனா். ஏடூா் மற்றும்கும்புளியில் மாவட்ட துணை செயலாளா் எம்.எல்.ரவி ஏற்பாட்டிலும், பூவலை ஊராட்சியில் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி தினகரன் மற்றும் விசிக நிா்வாகிகள் ஏற்பாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்வில் விசிக மாவட்ட செயலாளா் நேசகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில நிா்வாகி துளசிநாராயணன். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகி அருள், தேமுதிக மாவட்ட பொருளாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன், மனித நேய மக்கள் கட்சி சாதிக் பாட்ஷா மற்றும் திமுக கூட்டணி நிா்வாகிகள் தொண்டா்கள் திரளானோா் பங்கேற்றனா்.