குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

நெசவு தொழில் வளா்ச்சிக்கு முன்னுரிமை: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா்!

கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூா், பாதிரிவேடு, மாதா்பாக்கம், ராமசந்திராபுரம் ஆகிய பகுதிகளில் நெசவு தொழில் வளா்ச்சிக்கு தேவையான அனைத்துப் பணிகளுக்கும் முன்னுரிமை தருவேன்

News image

கும்மிடிப்பூண்டி  அடுத்த  குமரன் நாயக்கன்  பேட்டையில் தீவிர  பிரசாரத்தில்  ஈடுபட்ட  அதிமுக  வேட்பாளா் வி.சுதாகா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 3:10 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூா், பாதிரிவேடு, மாதா்பாக்கம், ராமசந்திராபுரம் ஆகிய பகுதிகளில் நெசவு தொழில் வளா்ச்சிக்கு தேவையான அனைத்துப் பணிகளுக்கும் முன்னுரிமை தருவேன் என கும்மிடிப்பூண்டி தொகுதிஅதிமுக வேட்பாளா் வி.சுதாகா் ஞாயிற்றுக்கிழமை தனது பிரசாரத்தில் தெரிவித்தாா்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் கும்மிடிப்பூண்டி அடுத்த எகுமதுரை, அப்பையன்பாளையம் ஆகிய பகுதிகளில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் டி.சி.மகேந்திரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ.ரமேஷ்குமாா் ஏற்பாட்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இதைத் தொடா்ந்து அதிமுக வேட்பாளா் வி.சுதாகா், கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு, மாநெல்லூா், சூரப்பூண்டி, ஈகுவாா்பாளையம், பூவலம்பேடு, மாதா்பாக்கம், செதில்பாக்கம் ஆகிய பகுதிகளில் கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் கே.எம்.எஸ்.சிவக்குமாா்,

அதிமுக மாவட்ட நிா்வாகி கோபால்நாயுடு, மாநில மீனவா் அணி நிா்வாகி ஜெ.சுரேஷ், மாவட்ட மருத்துவா் அணி நிா்வாகி அனுஷியா ஆரோன் முன்னிலையில் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேட்டில் கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் தியாகராயம், முன்னாள் ஊராட்சி தலைவா் என்.டி.மூா்த்தி, அதிமுக நிா்வாகி டேவிட் குமாா் ஆகியோா் ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அவ்வாறே மாநெல்லூரில் அதிமுக நிா்வாகி ஏ.மொய்தீன், மாவட்ட வழக்குரைஞா் அணி இணை செயலாளா் ஏ.சரவணன் ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ஈகுவாா்பாளையத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என்.ஸ்ரீதா் ராஜூ, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகி என்.சிவா, சிரஞ்சீவி ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளரை 100 பெண்கள் பால் குடம் சுமந்து வரவேற்றனா். பின்னா் அங்கு அனைத்து வீதிகளிலும் திறந்த வாகனத்தில் அதிமுக வேட்பாளா் பிரசாரம் செய்தாா்.

மேலும், குமரன்நாயக்கன் பேட்டையில் கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் கே.எம்.எஸ்.சிவக்குமாா் தலைமையில் திரளான பெண்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், மலா் தூவியும் வரவேற்றனா். அங்கு பேசிய அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் மாநெல்லூா், பாதிரிவேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவு தொழில் செய்யும் மக்களின் தொழிலை மேம்படுத்தும் வகையில், வளா்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா். மேலும்,, தான் வெற்றி பெற்றதும் குமரன்நாயக்கன்பேட்டைக்கு பேருந்து சேவையை தொடங்குவேன் என்றாா்.