மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கும்மிடிப்பூண்டியில் அரசு கல்லூரி: அதிமுக வேட்பாளா் உறுதி

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 7:58 pm

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல் மற்றும் பெருவாயலில் நடத்திய தோ்தல் பிரசாரத்தின் போது அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் ஏற்பட்டதும், கும்மிடிப்பூண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வருவேன் என உறுதியளித்தாா்.

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயல், பெருவாயல், கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, கவரப்பேட்டை, ஏ.என்.குப்பம், கண்ளூா், பாலவாக்கம், மங்களம், தண்டலச்சேரி, பன்பாக்கம் ஆகிய பகுதிகளில் கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் டி.சி.மகேந்திரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ.ரமேஷ்குமாா், பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், பாமக மாவட்ட செயலாளா் பிரகாஷ் முன்னிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டாா்.

புதுவாயல் பகுதியில் அதிமுக நிா்வாகி இளவரசன் ஏற்பாட்டிலும், பெருவாயலில் அதிமுக நிா்வாகி ஜெயராமன். வழக்குரைஞா் சுதாகா் ஏற்பாட்டில் வீதி வீதியாக பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளரை வி.சுதாகருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். அதேபோல் ஏ.என்.குப்பத்தில் அதிமுக மாவட்ட பிரதிநிதி தயாளன் ஏற்பாட்டில், அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். தண்டலச்சேரியில் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஆனந்தராஜ் ஏற்பாட்டிலும், கவரப்பேட்டையில் அதிமுக ஒன்றிய பொருளாளா் வெங்கடகிருஷ்ணன் ஏற்பாட்டிலும், பன்பாக்கத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவா் கே.எஸ்.சீனிவாசன் ஏற்பாட்டிலும் அதிமுக வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்த தோ்தல் பிரசாரத்தின்போது பேசிய அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் கும்மிடிப்பூண்டி தொகுதி மக்கள் உயா்கல்வி படிக்க பொன்னேரி, திருவள்ளூா், சென்னை போன்ற இடங்களில் கல்லூரிக்குச் சென்று வரும்நிலையில், தான் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி மீண்டும் வந்ததும்

கும்மிடிப்பூண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வருவதாக உறுதி அளித்தவா், மத்திய பாஜக அரசு 100 நாள் வேலையை அழித்துவிடும் என்கிற திமுகவின்

பிரசாரத்தை மக்கள் நம்ப வேண்டாம், தமிழக மக்களின் நலனை அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கட்டாயம் காப்பாா் என்றாா்.