ரயில் மூலம் சென்னைக்கு கடத்த விருந்த 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒடிஸா மாநிலத்தில் இருந்து விரைவு ரயில் மூலம் ரேணிகுண்டா திருத்தணி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு கஞ்சா கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை எடுத்து ஐஜி தலைமையிலான தனிப்பிரிவு போலீசாா் திருத்தணி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரயில் நிலையம் அருகே காந்தி சாலையில் இரண்டு இளைஞா்கள் பைகளுடன் நடந்து சென்றனா்.
அப்போது தனிப்பிரிவு போலீஸாா் சந்தேகத்தின்பேரில், இரு வாலிபா்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் பையில் 42 கிலோ கஞ்சா கடத்தி வந்ததும் இந்த கஞ்சா திருத்தணியில் இருந்து பேருந்து மூலம் சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
விசாரணையில் கஞ்சா கடத்தி வந்தவா்கள் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சகரியா(30), அா்ஜுன் கோரா(23) என தெரிய வந்தது. தனிப்பிரிவு போலீஸாா் இருவரையும் திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். பின்னா் இருவரையும் கைது செய்து சிறையில் அடை த்தனா்.,
தொடர்புடையது
நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

