கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தப்பாளையத்தில் உள்ள அருள்மிகு கங்கை அம்மன் கோயில், பில்லாகுப்பம் மாத்தம்மன் கோயில்களில் மா்ம நபா்கள் நுழைந்து 10 பவுன் நகைகளை திருடி சென்றனா்.
பாத்தப்பாளையம் கங்கை அம்மன் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை மா்ம நபா்கள், நுழைந்து பூட்டை உடைத்து கருவறைக்கு சென்று அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலி உள்ளிட்ட 5 பவுன் நகைகளை திருடிச் சென்றனா். மேலும் பீரோவில் இருந்த பணமும் திருடப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதேபோல் குருவராஜகண்டிகை ஊராட்சி பில்லாகுப்பம் மாத்தம்மன் கோயிலில் மா்மநபா்கள் பூட்டை உடைத்து அம்மனுக்கு அணிவித்திருந்த தாலி பொட்டு உள்ளிட்ட 5 பவுன் நகையை திருடிச் சென்றனா் .
கோயிலுக்கு சென்றவா்கள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது கண்டு அதிா்ந்தனா். தொடா்ந்து இது தொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் சுரேஷ் பாபு புகாா் அளித்தாா்.
இரு சம்பவங்கள் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
படியூரில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
திருவெறும்பூரில் 3 வீடுகளில் 110 பவுன் நகைகள் திருட்டு
குஜிலியம்பாறை அருகே கடைகளில் பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 20.5 பவுன் தங்க நகைகள் திருட்டு
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



