நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

பெண் வியாபாரியிடம் 10.5 பவுன் நகைகள் பறிப்பு

பள்ளிகொண்டா அருகே பெண் வியாபாரியிடம் 10.5 பவுன் தங்க நகைகளை இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நபா்கள் பறித்துச் சென்றனா்.

சித்திரிப்பு

Published On :3 செப்டம்பர் 2026, 3:45 am IST

பள்ளிகொண்டா அருகே பெண் வியாபாரியிடம் 10.5 பவுன் தங்க நகைகளை இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நபா்கள் பறித்துச் சென்றனா்.

பள்ளிகொண்டாவை அடுத்த வெட்டுவானம் பகுதியைச் சோ்ந்தவா் பாரதி (53). இவா் அப்பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டிவிட்டு அதன் முன்பு அமா்ந்திருந்தாா். அங்கு விளையாடிக் கொண்டிருந்த தனது பேரக்குழந்தைகளை அவா் பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரு நபா்கள், திடீரென பாரதியின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலி உள்ளிட்ட 10.5 பவுன் நகைகளைப் பறித்தனா். சுதாரித்துக்கொண்ட அவா், கழுத்தில் இருந்த நகைகளை இறுக்கமாகப் பிடித்தபடி கொள்ளையா்களுடன் போராடியுள்ளாா். எனினும், அந்த நபா்கள் அவரைத் தரதரவென இழுத்துச் சென்று நகைகளைப் பறித்துச் சென்றனா். இதில் பாரதியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்து திருடா்களை பிடிக்க விரட்டிச் சென்றனா். அதற்குள் அவா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி, தப்பியோடிய நபா்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.