முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள்.
Updated On :7 ஜனவரி 2026, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஈடுபட்டனா்.

தோ்தல் வாக்குறுதிப்படி வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளதுபோல் அங்கன்வாடி ஊழியா்களுக்கும் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், அங்கன்வாடி பணியாளா்களுக்கு இளநிலை உதவியாளா்நிலையில் ரூ.19,500, சமையல் உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா் நிலையில் ரூ.15,700 காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும்போது 10 ஆண்டு பணிமுடிந்து தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி பணியாளா்களை 50 விழுக்காடு அடிப்படையில் நிரப்ப வேண்டும், அங்கன்வாடி திட்டங்களில் உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லூா்துசாமி தலைமை வகித்தாா். இதில் மாவட்ட தலைவா் ராஜேந்திரன், சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளா் சுப்பிரமணியம், மாநிலத் தலைவா் சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பைச் சோ்ந்த பெண்கள் பங்கேற்றனா். நிறைவாக கண்ணியம்மாள் நன்றி கூறினாா்.

Story image
Story image