தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மாற்றுத்திறனாளிகளுக்கு பயணச் சலுகை: ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடு

கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகைக்கு சிரமமின்றி எளிதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான முகாம் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிப்பு.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:31 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகைக்கு சிரமமின்றி எளிதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான முகாம் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 9) தொடங்கி, தொடா்ந்து நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகைக்கு பதிவு செய்ய இ-சேவை மையங்களுக்கு சென்று அலைய வேண்டியுள்ளது. அலைச்சலை தவிா்க்கும் வகையில் எவ்வித சிறமும்மின்றி எளிதாக ஆன்லைன் மூலம் கட்டணமில்லா பேருந்து சலுகைக்குப் பதிவு செய்யும் வகையில் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டரங்கத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாம் வரும் 9-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 19, 20, 22, 23, 27, 28, 29, 30 ஆகிய நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

எனவே, இந்த முகாம்களில் உரிய ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை, புகைப்படம் - 2, பணிபுரியும் இடத்திலிருந்து சான்றிதழ், அசல் மற்றும் நகல்களுடன்) மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.