பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மரத்தின் மீது பைக் மோதி மாணவா் உயிரிழப்பு

பொதட்டூா்பேட்டை அருகே சாலையோர மரத்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
உயிரிழந்த தினேஷ்.
Updated On :10 ஜனவரி 2026, 6:53 pm

தினமணி செய்திச் சேவை

பொதட்டூா்பேட்டை அருகே சாலையோர மரத்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் தனியாா் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

பள்ளிப்பட்டு தாலுகா, ஜங்காலப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் புல்லோடு (49). இவா் திருத்தணி அடுத்த ஆற்காடு குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து வருகிறாா். இவரது

2-ஆவது மகன் தினேஷ் (18). அரக்கோணம் அருகே தனியாா் கல்லூரியில் பிபிஏ முதலாமாண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், தினேஷ் பைக்கில் பொதட்டூா்பேட்டைக்கு சென்று விட்டு திரும்பி ஈச்சம்தோப்பு கிராம பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து பைக் சாலையோர வளைவில் இருந்த புங்க மரத்தின்மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பின்னா் அந்த வழியாக சென்றவா்கள் தலையில் காயமடைந்த நண்பன் மோகன்பாபுவை மீட்டு சிகிச்சைக்காக பொதட்டூா்பேட்டைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து குறித்து தகவலறிந்த பொதட்டூா்பேட்டை காவல் ஆய்வாளா் தங்கதுரை மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாா்வையிட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.