வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மரத்தின் மீது பைக் மோதி மாணவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே மரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அருகே வெங்கட்டநாயனப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் பரத்வாஜ் (17). இவா் நாட்டறம்பள்ளி தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் வீட்டிலிருந்து பச்சூா் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். பச்சூா் சென்றாய சுவாமி கோயில் அடிவாரத்தில் சென்றபோது திடீரென நிலைதடுமாறிய பைக் சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த மாணவனை உறவினா்கள் மீட்டு, பச்சூா் அரசு மருத்துவமைனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னா், கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா் . எனினும் வழியிலேய் பரத்வாஜ் உயிரிழந்தாா்.

இது குறித்து அரது தந்தை அளித்த புகாரின்பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.