திருவள்ளூர்
ஜன. 16, 26 தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு
திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளை வரும் 16 மற்றும் 26 தேதிகளில் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளை வரும் 16 மற்றும் 26 தேதிகளில் மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவள்ளூவா் தினமான 16- ஆம் தேதியும் மற்றும் குடியரசு தினமான 26 -ஆம் தேதியும் டாஸ்மாக் மதுக்கடைகளை தற்காலிகமாக மூடப்பட வேண்டும். இதையும் மீறி அன்றைய நாள்களில் கள்ளத்தனமாக விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் எச்சரித்துள்ளாா்.
