சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜன.16, 26-இல் மதுக்கடைகள் மூடல்!

கடலூா் மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் 26-ஆம் தேதிகளில் அனைத்து மது பானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் செயல்படாது என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:05 pm

Syndication

கடலூா் மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் 26-ஆம் தேதிகளில் அனைத்து மது பானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் செயல்படாது என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளுவா் தினமான ஜன. 16, குடியரசு தினமான ஜன. 26- ஆகிய நாள்களில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் (பாா்கள்) மூடி மதுபானங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.

மேற்படி நாள்களில், அரசு உத்தரவை மீறி மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமதாரா்கள் மீது கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.