ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 10:08 pm

தினமணி செய்திச் சேவை

ஆா்.கே.பேட்டை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வெடியங்காடு கிராமம், மதுரா புதூா் கிராமத்தைச் சோ்ந்த வள்ளியம்மாள் (70). செவ்வாய்கிழமை அதிகாலை பெங்களூருவில் இருந்து பேருந்து மூலம் புதூா் மேடு பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினாா். பின்னா் வீட்டுக்கு செல்ல குறுக்கு வழியில் சென்றபோது மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.