சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் காலமானார்! 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர்! ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்! பாலங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் பலத்த சேதம்! சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி, 34 பேரைக் காணவில்லை தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!”காவலர் தேர்வை தள்ளி வைக்கக் கூடாது” - உதயநிதி ஸ்டாலின்சென்னை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!
/

திருவள்ளூர்: கூவம் ஆற்றங்கரையில் 50க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

திருவள்ளூரில் பரபரப்பு! கூவம் ஆற்றங்கரையில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

News image

படம் | யூடியூப்

Updated On :18 ஜனவரி 2026, 8:01 pm IST

திருவள்ளூர் : கூவம் ஆற்றங்கரையில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் பிஞ்சிவாக்கம் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் அப்பகுதியில் கூவம் ஆற்றங்கரையோரமாக காலையில் நடந்து சென்றபோது,10க்கும் மேற்பட்ட கற்சிலைகள் இருப்பதைக் கண்டு அதிர்சியடிந்து உடனடியாக அங்குள்ள மக்களுக்கு தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, ஆற்றில் நீரோட்டம் அதிகமாக இல்லாததால் ஆற்றில் இறங்கி அப்பகுதி மக்கள் தேடுதல் பணியை முடுக்கிவிட்டதன் பயனாக, 50க்கும் அதிகமான சுவாமி கற்சிலைகள் ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அந்தச் சிலைகள் அனைத்தையும் அவர்கள் சுத்தப்படுத்தி வழிபட எடுத்து செல்ல திட்டமிட்டனர்.

இந்த நிலையில், தகவலறிந்து அம்பவ இடத்துக்குச் சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள், சிலைகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். அதன்பின், அங்கிருந்து சிலைகளை மீட்டு எடுத்துச் சென்றனர்.

Summary

Thiruvallur: 50 idols of deities discovered on the banks of the Cooum River

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.