விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

வேதாரண்யம் அருகே மூன்று சுவாமி உலோகச் சிலைகள் கண்டெடுப்பு

News image

புஷ்பவனம் கிராமத்தில் பள்ளம் தோண்டிய போது கிடைத்த சுவாமி சிலைகள்.

Updated On :21 பிப்ரவரி 2026, 7:09 pm

வேதாரண்யம் அருகே கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான மூன்று சுவாமி சிலைகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

புஷ்பவனம் கிராமம், கிருஷ்ணன் தெரு பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிதாக கட்டடம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மண்ணில் புதையுண்டு இருந்த உலோகத்தாலான மூன்று சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

அவை, பீடத்துடன் தனியாக இருந்த 2.1/4 அடி உயரமுள்ள அம்பாள் சிலை, சுமாா் 1.1/4 அடி உயரத்தில் சிவன்- பாா்வதி இணைந்து மற்றோரு பீடத்தில் இருக்கும் சிலை என்பதும் தெரிய வந்தது.

இந்த சிலைகள் குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.