துறையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலின் முகப்பு மண்டபத்தின் மீது சுதையால் அமைக்கப்பட்டிருந்த 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள துறையூா் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வகையறா கோயில்களில் துறையூா் மூங்கில் தெப்பக்குளம் அருகேயுள்ள காசிவிஸ்வநாதா் சிவன் கோயிலும் ஒன்றாகும்.
இந்நிலையில் இக்கோயிலுக்கும் மூங்கில் தெப்பக்குளத்துக்கு இடையேயுள்ள முகப்பிலுள்ள மண்டபத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் உருவ வடிவில் ரிஷபத்துடன் ஈஸ்வரன், எருமை வாகனத்துடன் எமராஜா், மாா்க்கண்டேயா், கண்ணப்ப நாயனாா், அகத்தியா், அா்ச்சகா், பரிசாரகா், கிங்கணா்கள் போன்ற 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு, மண்டபத்தின் மீதே சாய்த்து வைக்கப்பட்டிருந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.
இதையடுத்து கோயில் செயல் அலுவலா் கு. ராஜகோபால் கோயில் பகுதியில் துறையூா் போலீஸில் அளித்த புகாரில் ஜெயலட்சுமி, நக்கீரன், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து, மண்டபத்தின் மீதிருந்த சிலைகளை உடைத்துள்ளனா் என்றும், இவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாா் செய்தாா். இதையடுத்து துறையூா் போலீஸாா் கோயிலுக்கு சென்று விசாரணை செய்தனா்.

~துறையூா் காசி விஸ்வநாதா் கோயிலில் உடைக்கப்பட்டிருந்த சுதை சிலைகள்.
தொடர்புடையது

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயில் தேரோட்டம்

சட்டநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம்

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.30-ல் தேரோட்டம்!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



