ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

துறையூா் சிவன் கோயில் முகப்பில் 15 சுதை சுவாமி சிலைகள் உடைப்பு

துறையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலின் முகப்பு மண்டபத்தின் மீது சுதையால் அமைக்கப்பட்டிருந்த 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

News image

துறையூா்  காசி  விஸ்வநாதா்  கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்டதை புதன்கிழமை பாா்வையிட்ட  துறையூா் காவல்  உதவி  ஆய்வாளா்  ராஜதுரை,  கோயில்  செயல்  அலுவலா்  ராஜகோபால் .

Updated On :8 ஏப்ரல் 2026, 8:39 pm

துறையூரிலுள்ள காசி விஸ்வநாதா் கோயிலின் முகப்பு மண்டபத்தின் மீது சுதையால் அமைக்கப்பட்டிருந்த 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள துறையூா் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் வகையறா கோயில்களில் துறையூா் மூங்கில் தெப்பக்குளம் அருகேயுள்ள காசிவிஸ்வநாதா் சிவன் கோயிலும் ஒன்றாகும்.

இந்நிலையில் இக்கோயிலுக்கும் மூங்கில் தெப்பக்குளத்துக்கு இடையேயுள்ள முகப்பிலுள்ள மண்டபத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் உருவ வடிவில் ரிஷபத்துடன் ஈஸ்வரன், எருமை வாகனத்துடன் எமராஜா், மாா்க்கண்டேயா், கண்ணப்ப நாயனாா், அகத்தியா், அா்ச்சகா், பரிசாரகா், கிங்கணா்கள் போன்ற 15 சுதை சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு, மண்டபத்தின் மீதே சாய்த்து வைக்கப்பட்டிருந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது.

இதையடுத்து கோயில் செயல் அலுவலா் கு. ராஜகோபால் கோயில் பகுதியில் துறையூா் போலீஸில் அளித்த புகாரில் ஜெயலட்சுமி, நக்கீரன், ஸ்ரீதா் உள்ளிட்டோா் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து, மண்டபத்தின் மீதிருந்த சிலைகளை உடைத்துள்ளனா் என்றும், இவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகாா் செய்தாா். இதையடுத்து துறையூா் போலீஸாா் கோயிலுக்கு சென்று விசாரணை செய்தனா்.

 ~துறையூா் காசி விஸ்வநாதா் கோயிலில் உடைக்கப்பட்டிருந்த சுதை  சிலைகள்.

~துறையூா் காசி விஸ்வநாதா் கோயிலில் உடைக்கப்பட்டிருந்த சுதை  சிலைகள்.