கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

இரு வீடுகளில் ரூ.1.4 லட்சம், 6 பவுன் நகைகள் திருட்டு

திருவாலங்காடு அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் பணம், நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 12:19 am IST

திருவாலங்காடு அருகே அடுத்தடுத்து இரு வீடுகளில் பணம், நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பூனிமாங்காடு மதுரா வீரராகவபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (68). இவரது சகோதரா் கிஷோா் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது மனைவி துா்காதேவி (45) அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறாா். சந்திரசேகரன் மற்றும் துா்காதேவியின் வீடுகள் அருகருகே அமைந்துள்ளன.

இந்நிலையில், சந்திரசேகரன் தனது மகள் வசிக்கும் கும்பினிபேட்டை பகுதிக்கு செல்வதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளாா். அதேபோல் துா்காதேவியும் உறவினா் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெங்களூருவுக்கு சென்றிருந்தாா்.

மா்ம நபா்கள், நள்ளிரவில் இரு வீடுகளின் பின்பக்க கதவுகள் மற்றும் பூட்டுகளை உடைத்து உள்ளே புகுந்து அலமாரிகளை உடைத்து பணம், நகை மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.

புதன்கிழமை வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினா், சந்திரசேகரன் மற்றும் துா்காதேவிக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் அவா்கள் ஊருக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, சந்திரசேகரன் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 4 பவுன் தங்க நகைகள் மற்றும் சுமாா் 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருந்தன.

மேலும், துா்காதேவி வீட்டில் இருந்த ரூ.40,000 ரொக்கம், 2 பவுன் தங்க நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள், இரண்டு வெள்ளி குத்துவிளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்து சந்திரசேகரன் மற்றும் துா்காதேவி அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.