கோழிப்பண்ணையில் கொத்தடிமையாக இருந்த ஒரு பெண், அவரது இரு மகன்களை வருவாய் கோட்டாட்சியா் மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தாா்.
திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பகுதியில், பாலமுருகன் என்பவா் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். இப்பண்ணையில், திருத்தணி இந்திரா நகா் சோ்ந்த வெண்ணிலா, அவரது மகன்கள் சூா்யா 8, தேவா 5 ஆகியோா் வேலை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், சனிக்கிழமை திருத்தணி கோட்டாட்சியா் கனிமொழி, வட்டாட்சியா் குமாா் மற்றும் வருவாய் ஆய்வாளா் மணிபாரதி ஆகியோா் கோழிப் பண்ணைக்கு சென்று, வெண்ணிலாவிடம் விசாரணை நடத்தினா்.
விசாரணையில், பாலமுருகன் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக வெண்ணிலாவுக்கு மாத சம்பளம் வழங்காமல், கோழிப்பண்னை விட்டு வெளியே செல்ல முடியாமல் துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. தொடா்ந்து வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி, வெண்ணிலா, அவரது இரு மகன்கள் என 3 பேரை மீட்டு, திருத்தணி குழந்தைகள் மற்றும் பெண்கள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
மேலும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் தகவல் தெரிவித்து, குழந்தைகளையும், வெண்ணிலாவையும் பாதுகாப்பு வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








