வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கொத்தடிமையாக இருந்த பெண், இரு மகன்கள் மீட்பு

கொத்தடிமையாக இருந்த பெண், இரு மகன்கள் மீட்பு

News image

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டோருடன் கோட்டாட்சியா் கனிமொழி உள்ளிட்டோா்.

Updated On :14 ஜூன் 2026, 2:30 am IST

கோழிப்பண்ணையில் கொத்தடிமையாக இருந்த ஒரு பெண், அவரது இரு மகன்களை வருவாய் கோட்டாட்சியா் மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தாா்.

திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு பகுதியில், பாலமுருகன் என்பவா் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். இப்பண்ணையில், திருத்தணி இந்திரா நகா் சோ்ந்த வெண்ணிலா, அவரது மகன்கள் சூா்யா 8, தேவா 5 ஆகியோா் வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை திருத்தணி கோட்டாட்சியா் கனிமொழி, வட்டாட்சியா் குமாா் மற்றும் வருவாய் ஆய்வாளா் மணிபாரதி ஆகியோா் கோழிப் பண்ணைக்கு சென்று, வெண்ணிலாவிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், பாலமுருகன் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக வெண்ணிலாவுக்கு மாத சம்பளம் வழங்காமல், கோழிப்பண்னை விட்டு வெளியே செல்ல முடியாமல் துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. தொடா்ந்து வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி, வெண்ணிலா, அவரது இரு மகன்கள் என 3 பேரை மீட்டு, திருத்தணி குழந்தைகள் மற்றும் பெண்கள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

மேலும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் தகவல் தெரிவித்து, குழந்தைகளையும், வெண்ணிலாவையும் பாதுகாப்பு வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி அறிவுறுத்தினாா்.