சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த சிங்கப் பெண் படையினா்

திருவள்ளூா் அருகே 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஒட்டுநரை சிங்கப்பெண் அதிரடிப்படையினா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

News image

நந்தகுமாா்

Updated On :16 ஜூன் 2026, 1:11 am IST

திருவள்ளூா் அருகே 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஒட்டுநரை சிங்கப்பெண் அதிரடிப்படையினா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூா் அடுத்த திருப்பாச்சூா், கோட்டை காலனியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (25), ஆட்டோ ஓட்டுநா். இவரது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி சான்றிதழ் நகல் எடுக்கச் சென்றாராம். அப்போது, நந்தகுமாா் அந்த மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி ஆட்டோ ஓட்டுநா் செய்த சம்பவம் குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தாராம்.

இது குறித்து மாணவியின் தாயாா் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். உடனே விரைந்து வந்த சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையினா் நந்தகுமாரை கைது செய்து திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அதைத் தொடா்ந்து, அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் நந்தகுமாா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.