/
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் அருகே சம்போடை கிராமத்தைச் சோ்ந்த செளந்தரராஜன் (56) என்பவா், அப்பகுதியில் கடந்த 21-ஆம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த 26 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
மேலும், கடந்த 23-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த இந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்தி அதே கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (46) என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது
பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: சாட்சிகளிடம் விசாரணை நிறைவு

கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: மேலும் ஒருவா் கைது
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


