பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: 2 போ் கைது

ஜெயங்கொண்டம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 2:47 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஜெயங்கொண்டம் அருகே சம்போடை கிராமத்தைச் சோ்ந்த செளந்தரராஜன் (56) என்பவா், அப்பகுதியில் கடந்த 21-ஆம் தேதி மாடு மேய்த்துக் கொண்டிருந்த 26 வயதுடைய வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை அண்மையில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

மேலும், கடந்த 23-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த இந்தப் பெண்ணை அடித்து துன்புறுத்தி அதே கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (46) என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.