கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி கைது

பாபநாசம் அருகே உள்ள கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 ஜூலை 2026, 12:23 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள கிராமத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். 

அம்மாபேட்டை காவல் சரகம், உடையாா்கோவில் கிராமத்தை சோ்ந்த ஆறுமுகம் மகன் துளசிராமன் (55). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 16-ஆம் தேதி ரேஷன் கடைக்கு பொருள்கள் வாங்க வந்த மனநிலை பாதிக்கப்பட்ட 20 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாா். பின்னா் வீடு திரும்பிய அந்தப் பெண்ணிடம் குடும்பத்தினா் கேட்டபோது, அவரால் என்ன நடந்தது என்பதை கூறமுடியவில்லையாம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் அம்மாபேட்டை போலீஸில் புகாா் அளித்தனா்.

இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில் துளசிராமன் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, துளசிராமனை போலீஸாா் கைது செய்து, நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.