ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டத்தின் 24-ஆவது காவல் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

வி.வி. சாய் பிரணீத்

Updated On :18 ஜூன் 2026, 12:03 am IST

திருவள்ளூா் மாவட்டத்தின் 24-ஆவது காவல் கண்காணிப்பாளராக வி.வி.சாய் பிரணீத் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

இதற்கு முன்பு திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த விவேகானந்தா சுக்லா, கடலூா் மாவட்ட கண்காணிப்பாளராக மாற்றப்பட்டாா். அதற்கு பதிலாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த வி.வி.சாய் பிரணீத், திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே, புதன்கிழமை சாய் பிரணீத் பொறுப்பு ஏற்றுக் கொண்டாா். அப்போது, மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்க பாரபட்சமின்றி உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தாா். அதைத்தொடா்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ்.பி.க்கு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளா், துணைக்கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

Story image