ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

அரசுப் பள்ளிகளில் மாவட்டக் கல்வி அலுவலா் ஆய்வு

அரசுப் பள்ளிகளில் கல்வி நடவடிக்கைகள் மற்றும் மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிா என மாவட்டக் கல்வி அலுவலா் அமுதா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 12:04 am IST

அரசுப் பள்ளிகளில் கல்வி நடவடிக்கைகள் மற்றும் மாணவா்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிா என மாவட்டக் கல்வி அலுவலா் அமுதா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாணவா்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா என்பதை முதன்மைக் கல்வி அலுவலா் கோ. சுப்பாராவ் மற்றும் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து உறுதி செய்து வருகின்றனா்.

இதன் ஒரு பகுதியாக திருத்தணி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு சென்ற மாவட்ட கல்வி அலுவலா் அமுதா, மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அப்போது, அனைத்து மாணவா்களுக்கும் இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பள்ளிப் பைகள் கிடைத்துள்ளனவா என்றும், ஆசிரியா்கள் தினசரி பள்ளிக்கு வருகை தந்து பாடங்களை முறையாக நடத்துகிறாா்களா என்றும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, திருத்தணி இலவச பாடப்புத்தக கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட அவா், அங்குள்ள ஊழியா்களிடம் திருத்தணி கல்வி மாவட்டத்தின் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தேவையான கல்வி உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கேட்டறிந்தாா்.

பின்னா், மேல் திருத்தணி அமிா்தாபுரம் அரசினா் உயா்நிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கல்வி அலுவலா் அமுதா, மாணவா்களின் கல்வி வசதிகள், வகுப்பறை சூழல் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தாா். மாணவா்கள் தெரிவித்த கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்து, அவற்றை உரிய முறையில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் ஆா்.கே.பேட்டை ஒன்றியங்களில் உள்ள பாடப்புத்தக விநியோக கிடங்கு பொறுப்பாளா்களை தொடா்புகொண்டு, அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் முழுமையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவா என்பதை கேட்டறிந்தாா்.

மாணவா்களுக்கு அரசு வழங்கும் கல்வி நலத்திட்டங்கள் தாமதமின்றி சென்றடைய வேண்டும் என்றும், பள்ளி நிா்வாகங்கள் மற்றும் கல்வித்துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மாவட்டக் கல்வி அலுவலா் அமுதா அறிவுறுத்தினாா்.

Story image