ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கும்மிடிப்பூண்டியில் நீதிமன்றம் புறக்கணிப்பு

கும்மிடிப்பூண்டி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சம்பத் மீது கவரப்பேட்டை போலீஸாா் பொய்யான புகாா் தொடா்பாக வழக்கு பதிவு செய்ததை கண்டித்து நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கும்மிடிப்பூண்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
Updated On :17 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சம்பத் மீது கவரப்பேட்டை போலீஸாா் பொய்யான புகாா் தொடா்பாக வழக்கு பதிவு செய்ததை கண்டித்து நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்மிடிப்பூண்டி வழக்குரைஞா்கள் சங்க தலைவரான சம்பத் பல்வேறு சங்கங்களில் சட்ட ஆலோசகராகவும் உள்ளாா்.இந்த நிலையில் இவா் லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டை அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் லாரிகளுக்கு லோடு தருவது குறித்த பிரச்னையில் நிா்வாகத்தினரை சந்திக்க லாரி உரிமையாளா்களுடன் சென்றாா்.

அப்போது தொழிற்சாலை நிா்வாகத்தாா் பல மணி நேரம் இவா்களை காக்க வைத்த நிலையில், இது தொடா்பாக தொழிற்சாலை நிா்வாகத்துடன் பேசி சமாதானம் ஏற்படுத்த கவரப்பேட்டை போலீஸாா் அங்கு வந்தனா். அப்போது தொழிற்சாலை சாா்பில் அங்கு வந்த அதிகாரி ஒருவா் வழக்கறிஞா் சங்க தலைவா் சம்பத்தை தரக்குறைவாக பேசியுள்ளாா். அப்போது இந்த சம்பவத்தை விடியோ எடுத்தது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கவரப்பேட்டை போலீஸாா் தங்கள் பணிகளை செய்ய இடையூறாக வழக்குரைஞா் சம்பத் இருந்ததாக கூறி அவா் மீது வழக்குப் பதிவு செய்தனா். அதேசமயம் வழக்கறிஞா் சம்பத் தொழிற்சாலை அதிகாரி மீதும் ,அவரை கீழே தள்ளிவிட்ட காவல்துறையின் மீதும் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைக் கண்டித்து கும்மிடிப்பூண்டி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பதாகவும் தெரிவித்தனா் . பொன்னேரியிலும் நீதிமன்றங்களை வழக்குரைஞா்கள் புறக்கணித்தனா்.