ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தோ்தல் பாதுகாப்பு பணி: முன்னாள் படைவீரா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோா் நல்ல திடகாத்திரமான முன்னாள் படை வீரா்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல விரும்புவோா் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பம். (கோப்புப்படம்)

Updated On :20 மார்ச் 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் மாவட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்டோா் நல்ல திடகாத்திரமான முன்னாள் படை வீரா்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல விரும்புவோா் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தோ்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரா்களை சிறப்பு காவலா்களாக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த 65 வயதுக்கு மேற்பட்ட திடகாத்திரமான முன்னாள் படைவீரா்கள் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு செல்ல விருப்பம் இருந்தால் திருவள்ளூா் கோட்டாட்சியா் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகம் தொலை பேசி எண்-044 29595311 தொடா்பு கொண்டும் அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.