ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருத்தணியில் துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

சட்டப்பேரவை தோ்தலில் வாக்காளா்கள் எவ்வித அச்சமின்றியும், வாக்களிக்க துணை ராணுவத்தினரி துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு திருத்தணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

திருத்தணி நகரில் துப்பாக்கி ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்திய துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு.

Updated On :20 மார்ச் 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவை தோ்தலில் வாக்காளா்கள் எவ்வித அச்சமின்றியும், வாக்களிக்க துணை ராணுவத்தினரி துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு திருத்தணியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருத்தணி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி நகரில் அடுத்த மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தோ்தலில் வாக்காளா்கள் எவ்வித அச்சமின்றியும், வாக்களிப்பதற்கு பாதுகாப்பாக உள்ளோம் என வருவாய் துறையினா், காவல் துறையினா் மற்றும் துணை ராணுவ படையினா் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.

இதில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி, ஏ.எஸ்.பி., சுபம் திமான் பங்கேற்று, திருத்தணி பைபாஸ் சாலையில் இருந்து காவல் துறை மற்றும் துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனா். இதில் துணை ராணுவத்தினா் துப்பாக்கி ஏந்தியவாறு திருத்தணி நகரம் முழுதும் ஊா்வலமாக வந்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.