தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்

திருவள்ளூா் அருகே சோளீஸ்வரா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி உற்சவா் பூதவாகனத்தில் எழுந்தருளி பக்தா்களை அருள்பாலித்தாா்.

News image

பூத வாகனத்தில் அருள்பாலித்த  சோளீஸ்வரா். ~பூத வாகனத்தில் அருள்பாலித்த  சோளீஸ்வரா்.

Updated On :24 மார்ச் 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே சோளீஸ்வரா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி உற்சவா் பூதவாகனத்தில் எழுந்தருளி பக்தா்களை அருள்பாலித்தாா்.

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 22-ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து பத்து நாள்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் இரண்டாம் நாளான திங்கள்கிழமை இரவு பூத வாகனத்தில் காமாட்சி அம்மனுடன் சோளீஸ்வரா் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அதைத் தொடா்ந்து வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தாா்.

Story image