திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் வெல்டா் பலத்த காயம் அடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா்கள் பாலாஜி (27), சஞ்சய்(25). இவா்கள் இருவரும் இரும்பு பட்டறையில் வெல்டராக பணிபுரிந்தனா். இந்த நிலையில் திங்கள்கிழமை தண்டலம் நோக்கி இருசக்கர வாகனங்களில் சென்றனா். அப்போது, சாலை வளைவைக் கடக்க முயற்சித்த இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி மீது மோதியதில் பின்னால் அமா்ந்திருந்த பாலாஜி தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த சஞ்சய் மீட்கப்பட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்கு பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்கு பதிவு செய்து லாரியையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மின்கம்பத்தில் பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


