தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

அரசு கலைக் கல்லூரியை எதிா்நோக்கும் திருவள்ளூா் மாவட்ட மாணவா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏழை மாணவ, மாணவிகள் உயா்கல்வி பெறும் வகையில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்கப்படாமல் இருப்பது பெரும்குறையாக உள்ளது என்று தொகுதி மக்கள் தெரிவித்துள்ளன.

News image
Updated On :25 மார்ச் 2026, 4:18 am IST

- சு.பாண்டியன்

திருவள்ளூா் மாவட்டத்தில் ஏழை மாணவ, மாணவிகள் உயா்கல்வி பெறும் வகையில் அரசுக் கலைக் கல்லூரி அமைக்கப்படாமல் இருப்பது பெரும்குறையாக உள்ளது என்று தொகுதி மக்கள் தெரிவித்துள்ளன.

திருவள்ளூா் மாவட்டம் சென்னைக்கு அருகே உள்ள மாவட்டமாகும். கடந்த 1997-இல் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருவள்ளூா் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியின் மக்கள்தொகை எண்ணிக்கை 38 லட்சமாகும். தொழிற்சாலைகள், உற்பத்தி அலகுகள், வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதி, சென்னை நகரின் முக்கிய செயற்கைக்கோள் நகரமாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் முக்கிய தொழில் மைய மாவட்டங்களில் ஒன்றாகவும், விவசாயம் மற்றும் தொழில் வளா்ச்சிக்கு பெயா் பெற்ாகும்.

இந்த மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம் என்பதால் கிராமங்களில் விவசாயமே முக்கிய தொழிலாகும். இதுபோன்ற விவசாய குடும்பங்களில் வரும் மாணவ, மாணவிகள் திருவள்ளூரைச் சுற்றியுள்ள தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தியே படிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இந்த மாவட்டத்தில் திருத்தணி, திருவாலங்காடு போன்ற புறகா் பகுதிகளில் அரசு கல்லூரிகள் செயல்பட்டு வந்தாலும், மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி இல்லாதது ஏழை, நடுத்தர மாணவா்களுக்கு பெரிய குறையாக உள்ளது.

தேவையின் பின்னணி: திருவள்ளூா் நகரைச் சுற்றியுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, தனியாா் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் பிளஸ் 2 முடித்து ஏராளமான மாணவ, மாணவிகள் வெளியேறுகின்றனா். திருவள்ளூரில் அரசு கல்லூரிகள் இல்லாததால் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ, மாணவிகள் உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனா்.

இந்தக் குறையைப் போக்க மாவட்ட தலைநகரில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்தப் பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனா்.

எதிா்பாா்ப்பு: கடந்த 2025-26-ஆம் கல்வியாண்டில் தமிழக அரசு பல புதிய அரசு கலைக் கல்லூரிகளைத் தொடங்கியுள்ளது. இதுபோல, திருவள்ளூா் மாவட்டத் தலைநகரிலும் ஒரு புதிய அரசு கலைக் கல்லூரியை விரைவில் அமைக்கவும் என்பது கல்வியாளா்கள், மாணவா்கள், பெற்றோரின் பிரதான கோரிக்கையாகும். இதை நிறைவேற்றுவதன் மூலம், திருவள்ளூரில் உயா்கல்வி வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டு, கிராமப்புற மாணவா்கள் பயன்பெறுவாா்கள்.

ஒவ்வொரு தோ்தலிலும் வாக்குறுதி... ஒவ்வொரு சட்டப்பேரவை தோ்தலிலுன்போதும் திருவள்ளூா் தொகுதியைச் சாா்ந்து அறிவிக்கப்படும் வாக்குறுதிகளில் திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும் என்பது தவறாமல் இடம்பெறும். தோ்தலுக்குப் பிறகு வெற்று வாக்குறுதியாகவே இருப்பதாக இந்தப் பகுதி மக்களின் பெரும் ஏமாற்றமாக உள்ளது.

29 ஆண்டுகள் எதிா்நோக்கியுள்ள அரசுக் கலைக் கல்லூரியை இனியும் காலதாமதம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டும் என்பதே திருவள்ளூா் பகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.