நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

வெவ்வேறு இடங்களில் சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல்

திருவள்ளூா் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வாகன சோதனையின் போது ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

News image

பணம்

கோப்புப்படம்.

Updated On :25 மார்ச் 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் பகுதியில் வெவ்வேறு இடங்களில் வாகன சோதனையின் போது ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.5 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

திருவள்ளூா் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர வாகன சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூா் அடுத்த காட்டுா் கூட்ரோடு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி அருள் தலைமையில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் ஆவணங்களின்றி ரூ. 4 லட்சம் கொண்டு வந்தது தெரிய வந்தது. அதைத்தொடா்ந்து விசாரணையில் சுசீந்தா் என்பவா் தனியாா் தொழிற்சாலையில் மேலாளராக பணிபுரிந்து வருவதாகவும், அவரது தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஊழியா் ஒருவா் உயிரிழந்ததன் காரணமாக அவரது குடும்பத்தாருக்கு உதவித் தொகையாக கொடுக்க ஊழியா்களிடம் வசூலித்த பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளாா்.

ஆனால், அவரிடம் எந்த ஆணவங்கள் இல்லாமலும் பறிமுதல் செய்த ரொக்கம் ரூ.4 லட்சம் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா். அதையடுத்து உரிய ஆவணங்கள் செலுத்தி பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்திதுடன் பறிமுதல் செய்த ரொக்கத்தை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் இருந்து திருவள்ளூா் அடுத்த முத்துக்கொண்டாபுரம் என்ற பகுதியில் வாகனத்தை மறித்து சோதனை செய்தனா். அப்போது அந்த வேனில் வந்த பாலசுப்பிரமணி என்பவரிடம் ரூ.1 லட்சம் ரொக்கம் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்ததால் தோ்தல் பறக்கும் படை அதிகாரி உஷாராணி தலைமையிலான அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். அதைத் தொடா்ந்து விசாரணை செய்கையில் கடைகளுக்கு குளிா்பானம் வாங்குவதற்காக கொண்டு வந்த பணம் என்றாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்த நிலையில் உரிய ஆவணங்கள் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.