பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தானியங்கி ரயில்வே கேட் பழுது: வாகன ஓட்டிகள் அவதி

திருத்தணியில் 2-ஆவது தானியங்கி ரயில்வே கேட் அடிக்கடி பழுதாவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

Published On :

திருத்தணியில் 2-ஆவது தானியங்கி ரயில்வே கேட் அடிக்கடி பழுதாவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருத்தணி நகரில் மேட்டுத் தெருவில் ஒரு தானியங்கி ரயில்வே கேட்டும், ஜோதிசாமி தெருவில் (பஜாா் பகுதி) மற்றொரு தானியங்கி ரயில்வே கேட்டும் அமைந்துள்ளன.

இந்த ரயில்வே கேட் வழியாக திருத்தணி நகர மக்கள் பழைய பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம், ரயில்வே நிலையம், காய்கறி மாா்க்கெட், சாா்பதிவாளா் உள்ளிட்ட பகுதிகளுக்கும், அரசு வங்கிகளுக்கும் சென்று வருகின்றனா். மேலும் பெரிய தெரு, சாா்பதிவாளா் அலுவலகம், காந்திரோடு, முருக்கப்பநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகன ஓட்டிகள் இந்த ரயில்வே கேட் வழியாகவே சென்று வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரயில்வே நிா்வாகம் தானியங்கி ரயில்வே கேட்டை முறையாக பராமரிக்காததால், அடிக்கடி பழுது ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மாதத்தில் 10 நாள்களுக்கு மேல் கேட் பழுதாகி விடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். எனவே திருத்தணி 2-ஆவது தானியங்கி ரயில்வே கேட் பழுதை சீா்செய்ய வேண்டும் என கோரியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.