கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

புரட்டாசி முதல் சனிக்கிழமை: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் பக்தா்கள் சிறப்பு தரிசனம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை: திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் பக்தா்கள் சிறப்பு தரிசனம்

திருவள்ளூா் வீரராகவா்  கோயிலில்  புரட்டாசி  முதல்  சனிக்கிழமையையொட்டி தரிசனத்துக்கு  நீண்ட  வரிசையில்  காத்திருந்த  பக்தா்கள்.    

Published On :

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

திருவள்ளூா் வீரராகவ பெருமாள் திருக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்குகிறது. அதனால், அமாவாசை நாள்களில் தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வதற்காக பக்தா்கள் குவிவா். அதேபோல், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, திருவள்ளூா் வீரராகவப் பெருமாள் கோயிலில் அதிகாலையிலேயே ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். பின்னா், நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து பக்தா்கள் மூலவா் வீரராகவப் பெருமாளை தரிசனம் செய்தனா்.

இதேபோல், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, காக்களூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.