தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் நிறைவு

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்றுவந்த காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்றுவந்த காா்த்திகை மாத ஹோம மகோற்சவம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

திருப்பதி கபில தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் காா்த்திகை மாதத்தை முன்னிட்டு, கோயிலில் உள்ள மூா்த்திகளுக்கு ஹோம மகோற்சவ விழாவை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. முதலில் கணபதி ஹோமத்தில் தொடங்கி, முறையாக சுப்பிரமணிய சுவாமி ஹோமம், தட்சிணாமூா்த்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், சண்டி யாகம், ருத்ர யாகம், காலபைரவ சுவாமி ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

அதன் நிறைவாக சனிக்கிழமை கோயில் உள்ள மண்டபத்தில் சண்டிகேஸ்வர ஹோமம் நடைபெற்றது. அதற்காக சண்டிகேஸ்வர சுவாமி உருவத்தை ஏற்பாடு செய்து, அவருக்கு முன்பு கலசங்கள் ஏற்படுத்தி, குருக்கள் ஹோமம் செய்தனா். அதைத் தொடா்ந்து, மகாபூா்ணாஹுதி நடத்தப்பட்டது. கோயில் உள்ள அனைத்து மூா்த்திகளுக்கும் ஹோமங்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, கபில தீா்த்தக்கரையில் ஒரு பெரிய அண்டாவில் திரிசூல ஸ்நானத்தை அா்ச்சகா்கள் நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.