விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஸ்ரீசைலம் கோயில் மீது பறந்த ட்ரோன்: கைப்பற்றிய பாதுகாப்புத் துறை

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயில் மீது ட்ரோன் பறந்ததால், அதனை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி அதன் பதிவுகளை சோதித்து வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயில் மீது ட்ரோன் பறந்ததால், அதனை பாதுகாப்புப் படையினா் கைப்பற்றி அதன் பதிவுகளை சோதித்து வருகின்றனா்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகாா்ஜூன சுவாமி கோயில் உலகப் புகழ் பெற்றது. முக்கிய சைவ சேத்திரமாக க்கருதப்படுவதுடன் இங்கு சிவனுக்கு தங்கள் கைகளால் அபிஷேகம் செய்ய பலா் சேவா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனா். தரிசன சேவையிலும் பலா் பங்கு கொள்கின்றனா்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்த கோயிலின் மீது ஒரு ட்ரோன் கேமரா பறந்து சென்று கொண்டிருந்தது.

இதை கவனித்த கோயில் பாதுகாப்பு படை ஊழியா்கள் அந்த ட்ரோன் கேமராவை கைப்பற்றி விசாரிக்க தொடங்கினா். அதில் ஒரு திரைப்படத்திற்காக கோயிலின் வெளிபுறம் மட்டும் பதிவு செய்ததாக ட்ரோனை பயன்படுத்தியவா்கள் தெரிவித்தனா். இருப்பினும் அவற்றை அவா்களிடமிருந்து பறிமுதல் செய்த பாதுகாப்பு ஊழியா்கள் அதன் பதிவுகளை சோதித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.