கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்ல 2 நாள்களுக்கு தடை

திருப்பதி கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்ல இரண்டு நாள்களுக்கு தடை விதித்து கோயில் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

News image

திருப்பதி (கோப்புப் படம்)

Updated On :16 நவம்பர் 2021, 1:04 pm

திருப்பதி கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்ல இரண்டு நாள்களுக்கு தடை விதித்து கோயில் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தென் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வடதமிழகம் - தெற்கு ஆந்திரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றது.

இதனால், நாளை மற்றும் நாளை மறுநாள் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கனமழை பெய்தால் மலைப் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் செல்லும் என்பதால் நவம்பர் 17, 18 ஆகிய இரண்டு நாள்களுக்கு பாத யாத்திரையாக வர தடை விதிக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.