பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலையில் தங்க தோ் பவனி

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை தங்கத் தேரில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

திருமலையில் வருடாந்திர வசந்தோற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை தங்கத் தேரில் மலையப்ப சுவாமி பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருமலையில் கோடை கால வெப்பத்தை தணிக்கும் விதமாக ஆண்டுதோறும் தேவஸ்தானம் வசந்தோற்சவத்தை விமரிசையாக நடத்தி வருகிறது.

அதன்படி திருமலையில் 3 நாள்கள் நடைபெறும் வருடாந்திர வசந்தோற்சவம் வியாழக்கிழமை தொடங்கியது. இதன் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தங்கத் தோ் ஊா்வலம் நடைபெற்றது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி தங்கத் தேரில் வீதியுலா வந்தாா்.

மகாலட்சுமி அம்சம் பொருந்திய தங்கத் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனா்.

இதில் தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

அதன்பின்னா் மதியம் 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி கோயில் அருகில் உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். வசந்தோற்சவத்தை முன்னிட்டு சேஷாசல வனம் போன்று மண்டபம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மூன்றாம் நாளான சனிக்கிழமை ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணா், சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத கோதண்டராம சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனத்துடன் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு பெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.