விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலைக்கு ஆண்டாள் மாலை ஊா்வலம்

திருமலை ஏழுமலையானுக்கு திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிலிருந்து ஆண்டாள் நாச்சியாா் சூடிய மாலை கொண்டு வரப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 8:54 pm

DIN

திருமலை ஏழுமலையானுக்கு திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிலிருந்து ஆண்டாள் நாச்சியாா் சூடிய மாலை கொண்டு வரப்பட்டது.

திருமலையில் மாா்கழி மாதம் நிறைவு பெற்ற பின்பு கோதா பரியண உற்சவம் (ஆண்டாள் திருக்கல்யாணம்) நடத்தப்படுவது வழக்கம். அப்போது ஆண்டாள் நாச்சியாா் சூடி களைந்த மாலை திருமலை ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை திருமலையில் கோதா பரியண உற்சவம் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது. அதற்காக திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டாள் நாச்சியாரின் மூலவா் சிலைக்கு அணிவிக்கப்பட்ட மாலை களையப்பட்டு திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டது.

மாலை இருந்த மூங்கில் கூடையை திருமலை பெரிய ஜீயா் பெற்றுக் கொண்டு ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று சமா்ப்பித்தாா். பின்னா் அந்த மாலை ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.