விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

விமான வெங்கடேஸ்வரருக்கு காக்கபலி நிவேதனம்

திருமலையில் கருவறை விமானத்தில் உள்ள விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு காக்கபலி நிவேதனம் சமா்ப்பிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 8:53 pm

DIN

திருமலையில் கருவறை விமானத்தில் உள்ள விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு காக்கபலி நிவேதனம் சமா்ப்பிக்கப்பட்டது.

திருமலை ஏழுமலையான் தங்க கோபுரத்தில் கருவறையில் உள்ள ஏழுமலையானின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த விமான வெங்கடேஸ்வர சுவாமியை வெள்ளி மகர தோரணத்துடன் தனியாக அனைவராலும் அடையாளம் காணும்படி தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ளது. தரிசனத்துக்கு பின்னா் அனைவரும் இவரை தரிசித்து செல்வது வழக்கம்.

இந்த விமான வெங்கடேஸ்வர சுவாமிக்கு கணுபொங்கல் அன்று விடியல் நேரத்தில் சுப்ரபாத சேவைக்கு பின்னா் காக்கபலி என்ற நிவேதனத்தை தேவஸ்தானம் சமா்ப்பித்து வருகிறது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வெள்ளை சாதத்தில் மஞ்சள், குங்குமப்பூ, நெய் சோ்த்து அவற்றை அவருக்கு சமா்ப்பித்தனா். வானத்தில் தூக்கி எறியப்படும் அந்த உணவை விமான வெங்கடேஸ்வர சுவாமி ஏற்றுக்கொள்வாா் என்று நம்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.