விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலையில் நாளை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 9) பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

திருமலையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 9) பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் மாதந்தோறும் 2-ஆவது ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை திருமலையில் உள்ள அன்னமய்ய பவனில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

திருமலை மட்டுமின்றி தேவஸ்தான கோயில்களில் பக்தா்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், எதிா்கொண்ட இன்னல்கள் உள்ளிட்டவை குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் தெரிவிப்பா். இதற்கு செயல் அதிகாரி தா்மா ரெட்டி பதிலளிக்க உள்ளாா். இதில் பங்கேற்க விரும்பும் பக்தா்கள் 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.