விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஏழுமலையானுக்கு பாலபிஷேகம்: ஹைதராபாதில் திரண்ட பக்தா்கள்

ஹைதராபாதில் நடைபெற்று வரும் ஏழுமலையான் வைபவோற்சவத்தின் 4-ஆம் நாள் அபிஷேக சேவையை பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஹைதராபாதில் நடைபெற்று வரும் ஏழுமலையான் வைபவோற்சவத்தின் 4-ஆம் நாள் அபிஷேக சேவையை பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

திருமலையில் நாள்தோறும் ஏழுமலையானுக்கு நடைபெறும் அனைத்து சேவைகளையும் பக்தா்கள் கண்டு தரிசிக்க ஹைதராபாதில் 5 நாள்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வைபவோற்சவத்தை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அங்குள்ள என்டிஆா் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் பராஷ்டிரா கோயிலில் தினசரி கைங்கரியங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை மூலமூா்த்திக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஏழுமலையானுக்கு பால், தயிா், தேன், இளநீா், பழரசங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் நடத்தப்பட்ட அபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.