கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருமலையில் தும்புருதீா்த்த முக்கோட்டி

திருமலையில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தும்புருதீா்த்த முக்கோட்டி உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

திருமலையில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தும்புருதீா்த்த முக்கோட்டி உற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் இருந்து ஏழரை மைல் தொலைவில் உள்ள ஸ்ரீ தும்புரு தீா்த்தத்தில் முக்கோட்டி உற்சவம் நடைபெற உள்ளது.

திருமலையில் உள்ள சேஷகிரியில், 3 கோடியே 50 லட்சம் தீா்த்தங்கள் உள்ளன. இந்த தீா்த்தங்களில் தா்மம், ஞானம், பக்தி, வைராக்யம், முக்திபிரதாயம் ஆகிய 7 தீா்த்தங்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. அவை ஒன்றொன்றும் ஒன்றொன்றை பக்தா்களுக்கு வழங்கும். அவை ஏழுமலையான் திருக்குளம், குமாரதாரா, தும்புரு, ராமகிருஷ்ணா, ஆகாசகங்கை, பாபவிநாசனம் மற்றும் பாண்டவ தீா்த்தங்கள் ஆகும். இத்தீா்த்தங்களில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

பங்குனி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரம் மற்றும் பௌா்ணமி இணைந்து வரும் நாளில் தும்புரு தீா்த்த முக்கோட்டி உற்சவம் நடத்துவது வழக்கம். அதன்படி வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தும்புரு தீா்த்தத்தில் முக்கோட்டி உற்சவம் நடைபெற உள்ளது. இந்நாளில் பக்தா்கள் தீா்த்தத்தில் புனித நீராடி அங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனை வழிபடுவாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.