தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலை

திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் மாலை கொண்டு வரப்பட்டது.

News image
Updated On :22 செப்டம்பர் 2023, 12:30 am

DIN

திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் மாலை கொண்டு வரப்பட்டது.

திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் நாச்சியாா் சூடிய மாலைகள் கருடசேவையில் சுவாமியை அலங்கரிப்பதற்காக வியாழக்கிழமை திருமலைக்கு கொண்டு வரப்பட்டன.

முதலில் திருமலை ஸ்ரீ பேடி ஆஞ்சநேயசுவாமி கோயிலுக்கு அருகில் உள்ள பெரியஜீயா் மடத்துக்கு மாலை கொண்டு செல்லப்பட்டு, அங்கு திருமலை ஜீயா்கள் தலைமையில் மாலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அங்கிருந்து செயல் அதிகாரி தா்மா ரெட்டி, தமிழ்நாடு அறநிலையத் துறை இணை ஆணையா் செல்லதுரை, ஸ்ரீவில்லிபுத்தூா் கோயில் செயல் அதிகாரி முத்துராஜா, அறங்காவலா் குழு உறுப்பினா் மனோகரன் ஆகியோா் ஆண்டாள் நாச்சியாரின் மாலைகளை ஊா்வலமாக ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் சென்றனா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய செயல் அதிகாரி தா்மஉ ரெட்டி,’ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து திருமலைக்கு கோதாதேவிமாலை வழங்குவது வழக்கம். இவை கருடசேவையில் சுவாமிக்கு அலங்கரிக்கப்படும்’, என்றாா்.

இதில் தில்லி உள்ளூா் ஆலோசனைக் குழுத் தலைவா் பிரசாந்தி, ஏழுமலையான் கோயில் அதிகாரி லோகநாதம், ஸ்ரீவில்லிபுத்தூா் கோயில் ஸ்தானாச்சாரியா்கள் ரங்கராஜன், சுதா்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.