திருமலை: 60,519 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 60,519 பக்தா்கள் தரிசித்தனா். 27,788 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், பக்தா்களின் வருகை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.
அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ,பக்தா்களும், பெற்றோரும் இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
மேலும், வெள்ளிக்கிழமை முழுவதும் 60, 519 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 27, 788 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.53 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.