சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருமலையில் 83,284 பக்தா்கள் தரிசனம்!

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 83,384 பக்தா்கள் தரிசித்தனா். 25,517 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

News image

திருமலை - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 10:10 pm

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 83,384 பக்தா்கள் தரிசித்தனா். 25,517 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில் திங்கள்கிழமை நிலவரப்படி தரிம தரிசனத்துக்கு 12 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 83,284 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,517 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.78 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.