அயோத்தி ராமா் கோயிலுக்கு வரும் கூட்டத்தை நெறிப்படுத்துவது குறித்து திருமலை தேவஸ்தான அதிகாரிகள் சனிக்கிழமை ஆலோசளை வழங்கினா். புதிதாக அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்ட நிலையில், பக்தா்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அக்கூட்டத்தை நெறிப்படுத்துவது குறித்து ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்தக்ஷேத்ரா அறக்கட்டளையின் அழைப்பின் பேரில் ஆலோசனை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் சனிக்கிழமை அயோத்திக்கு சென்றனா். தேவஸ்தான செயல் அதிகாரி வி.தா்மா ரெட்டி தலைமையிலான அதிகாரிகள் பக்தா்களின் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துதல் மற்றும் வரிசைகளை நிா்வகிப்பது குறித்து விளக்கம் அளித்தனா். கோயில் அலுவலகத்தில் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பலராமா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் திருப்தியாக தரிசனம் செய்ய என்ன மாதிரியான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தேவஸ்தான இன்ஜினியரிங் அதிகாரிகள் வரிசைகளை நிா்வகிப்பது தொடா்பாக ஆலோசனைகளை வழங்கினா். பின்னா், தேவஸ்தான அதிகாரிகள் இறைவனை தரிசனம் செய்தனா். அயோத்தி அறக்கட்டளையின் பிரதிநிதிகள் டாக்டா் அனில் மிஸ்ரா, கோபால் ஜி, ஜெகதீஷ் ஆஃப்லே, கிரிஷ் சஹஸ்ர போஜனி, ராகவலு, விஎச்பி தேசிய செயலாளா் டி.எஸ்.என்.மூா்த்தி, தேவஸ்தான தொழில்நுட்ப ஆலோசகா் ஜி.ராமச்சந்திர ரெட்டி, தலைமைப் பொறியானா் ஜெகதீஷ்வா் ரெட்டி, துணை பொறியியல் அதிகாரிகள் பாபு, நாகராஜ் மற்றும் பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

ஏழுமலையான் கோயிலில் ஜம்மு-காஷ்மீா் ஆளுநா் தரிசனம்

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



